குறள் 781
| செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. | |
பொருள்: நட்பு கொள்வது போன்ற அரிய செயல் இல்லை.அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை. குறள் 782 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. | |
பொருள்: அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலாவாகத் தொடங்கி முழு நிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும். குறள் 783 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. | |
பொருள்: படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. குறள் 784 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. | |
பொருள்: நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துக்கூறி திருத்துவதற்காகும். குறள் 785 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். | |
பொருள்: இருவருக்கிடையே நட்பு வருவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை; இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது. | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக