TamilNatpu


9.17.2010

குறளும் பொருளும்

 நட்பு


குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

பொருள்:

 நட்பு கொள்வது போன்ற அரிய செயல் இல்லை.அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.


குறள் 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

பொருள்:

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலாவாகத் தொடங்கி முழு நிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.


குறள் 783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்:

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

குறள் 784

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

பொருள்:

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துக்கூறி திருத்துவதற்காகும்.


குறள் 785

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

பொருள்:

இருவருக்கிடையே நட்பு வருவதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை; இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக