TamilNatpu


4.10.2012

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!


இந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம் அறிவியல் எழுச்சியில் இறங்கியிருக்கஇங்கே சத்தமில்லாமல்வானவியலும்,இயற்பியலும்,கட்டடக் கலையும்இன்னும் இது போன்ற எத்தனையோ கலைகளும் சிறப்புற்றிருந்தன.


அந்த வரிசையில் கணிதவியலையும் எடுத்துக்கொள்ளலாம். 
ஒரு செங்கோண முக்கோணத்தில்அதன் கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது,
மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்.”- பித்தாகரஸ் தேற்றம்



இத்தேற்றத்தை கிரேக்க நாட்டு கணிதவியல் அறிஞர்மெய்யியல் அறிஞராகியபித்தேகோரசு கண்டுபிடித்தார் என்று பொதுவாக நம்பப்படுவதால்அவர் பெயரால் இத்தேற்றம் வழங்குகின்றது.ஆனால் அவருக்கு முன்பாகவே நமது புலவர் போதையனார் நமக்கு அருளியதை பார்க்கின்றோம்.



"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"

a=8(நீளம்)                                                       
b=6(குன்றம்)
c=?(கர்ணம்)
c= (a - a/8) + (b/2)
   = 8-(8/8) + (6/2) =10
c=10.




போதையனார் தேற்றத்தின் சிறப்பம்சம் என்னவென்றால்வர்க்கமூலம்(√)இல்லாமலேயேநம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.



பொது வாழ்விற்கும் உதவும் கணக்கு வழிமுறைகளும் நம்மிடம் உண்டு.



ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?



முடியும் என்கிறார்கள் நமது முன்னோர்கள்.இதோ ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்.



கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்.



ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்றுஆறு ,ஐந்துஇவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்



ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது 90X ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது 45X ஆகும் அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது 135X ஆகும்.



ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது810 ஆகும் எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.



அடுத்த முறை பூசணி வாங்கும் போது சரிபாருங்கள்.



எந்த பூசணிக்காயில் அதிக விதைகள் இருக்கின்றதோ அதை தான் ஒரு பூசணிக்காய் விவசாயி வாங்குவான்ஏன் என்றால் தன் நிலத்தில் அதிக விதைகளை பயிரிட்டால் தான் அவனுக்கு அதிக மகசூல் கிடைக்கும். சரி பூசணியை விடுங்கள்.



ஒரு சுளை ரூபாய்க்கு விற்கும் ஒரு பலாச்சுளை வியாபாரி அதிக சுளைகள் உள்ள பழங்களையே வாங்க விரும்புவான். பழங்களை உடைக்காமலே உள்ளிருக்கும் சுளைகளை அறிவது அவனுக்கு பயன் தரும்.அதற்கான வழிமுறையும் நம்மிடம் இருக்கிறது.


 

ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும்.



இந்த வழிமுறைகளைகணக்கதிகாரம் என்ற நூலில் தெளிவாக விளக்கியவர் காரிநாயனார் என்ற புலவர்!



ஆச்சர்யம் தான். இதைப் போலவே பல கணக்கியல் வல்லுனர்களும்,அவர்களது நூல்களும் நம் தமிழகத்தில் இன்று சுவடில்லாமல் மறைந்தன(ர்) என்பது உண்மை.



போனது போகட்டும். மிஞ்சி நிற்கும் பெருமைகளை நாகரிகம் என்ற பெயரால் அழியாமல் காத்துதமிழை வாழ வைப்போம்! தமிழன் என்ற பெருமையை நிலைநிறுத்துவோம்!



"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!"


உடல் இளைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா?.. இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்ட்


நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, பாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் போன்றவற்றினால் இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடலை குறைக்கிறேன் பேர்வழி என்று சந்தைகளில் கூவி கூவி விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி விழுங்குகின்றனர். இவ்வாறு உடல் மெலிவதற்காக உட்கொள்ளப்படுத் மாத்திரைகளினால் கடுமையான இதய பாதிப்புகள் ஏற்படும் என்று அமெரிக்காவில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் மார்வின் கொன்ஸ்டம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, யுஏஇ, இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலோனோர் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நீரிழிவு, இதயபாதிப்பு போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் உடல் மெலிவதற்காக மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

குண்டு உடலை இளைக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளால் இதயத்திற்கு ஆபத்தாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை விற்பனை செய்ய அமெரிக்க, ஐக்கிய அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பசியை கட்டுப்படுத்தும்

உடல் எடையைக் குறைக்கவும், உடல் மெலியவும் பயன்படுத்தும் மாத்திரைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது sibutramine(சிபுட்ராமின்) என்ற வேதிப்பொருளாகும். இப்பொருள் இதய அதிர்ச்சிக்கு காரணமாக அமையும் என மருத்துவ உலக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மருந்துகளில் சில தேவையற்ற கலவைகள் உள்ளன. இவை பசியை இல்லாமலாக்கும். இதனால் சாப்பிடும் உணவின் அளவு குறையும். ஆனால், இவை கடுமையான உடல்நலனை சீர்கெடுக்கும் பல பிரச்சனைகளை உருவாக்குவதாக புகார்கள் வெளியாகின.

இதயத்தை பாதிக்கும்

இதயத்துடிப்பை மிக அதிகமாக அதிகரிக்கச் செய்யும் sibutramine(சிபுட்ராமின்) இதய அதிர்ச்சிக்கும், முடக்குவாதத்திற்கும் காரணமாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து sibutramine(சிபுட்ராமின்) வேதிப்பொருள் அடங்கிய மருந்துகளை சந்தையிலிருந்து வாபஸ்பெற ஒரு சில நாடுகளின் அதிகாரிகள் தீர்மானித்தனர். 

மாத்திரைக்கு தடை

இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் இம்மருந்துகள் இதயம் தொடர்பான நோய்களுக்கும், அதிக இரத்த அழுத்தத்திற்கும் காரணமாவதாக யு.ஏ.இ சுகாதார அமைச்சகத்தின் மெடிக்கல் ப்ராக்டீஸ் அண்ட் லைசன்ஸ் பிரிவு சி.இ.ஒ டாக்டர்.அமீன் அல் அமீரி தெரிவித்துள்ளார். ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேசனின் உத்தரவின் படி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்த வேதிப்பொருள் அடங்கிய இதர சில மருந்துகள் ஏற்கனவே யு.ஏ.இயில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.இதயத்தின் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கும் என்பதால் உடல் மெலிய பயன்படுத்தப்படும் மாத்திரைகளுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து உணவுகள்

நம் நாட்டில் பல தொலைக்காட்சிகளில் இன்றைக்கு உடலை இளைக்கச் செய்யும் மாத்திரைகளும், டெலிஷாப்பிங் முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.ஆனால் உடல் எடையை குறைக்க முறையான உடற்பயிற்சியும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உட்கொண்டாலே போதும். கெட்ட கொழுப்புகள் அடங்கிய பீஸா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள். இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்காமல் செயற்கையாக உடல் எடையை குறைக்க நினைத்தால் தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதும் அவர்களின் எச்சரிக்கையாகும்.


சாப்பிட்ட உடனே ஜில்லுனு குடிக்காதீங்க! இதயத்திற்கு நல்லதில்லை


உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு
இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய் கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த  கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ச ஆயுட்காலம் 92 . ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.
உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

கொழுப்பு உறைந்து விடும்

 நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில்
 தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு  உணவு வரைக்கும் நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை  பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து  நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயநோயாளிகள் பாதிப்பு

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள்
பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு,
பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்

அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.