படம் - தளபதி
வருடம் - 1991
இசை - இளையராஜா
பாடகர் - எஸ்.பி.பாலசுப்ரமணியன்
காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும்
பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை விட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு
கச்சை கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோசம் சொர்க்கத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே
போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டேய்
பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டேய்
ஊதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பக்கூளம் பத்த வச்சு காயலாம்
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கின்ற நாள்தான் ஹோய்
பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்னா
உறவுக்கெல்லாம் கவலைப் பட்ட ஜென்மம் நானில்லை
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை
உள்ள மட்டும் தானே என் உசிரைக்கூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு
தாளமிட்டு பாட்டுப் பாடும் வானம்பாடி நான் தான்.
எம்பி 3 சுட்டி : http://movies-tv-songs.com/mp3/2007/Dhalapathy/Kaattukkuyilu.MP3
ஒளிப்பட சுட்டி : http://www.youtube.com/watch?v=5DlqbKEwtU8&feature=player_embedded
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக