| "இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்” திருக்குறள் - மனித இனத்திற்கு கிடைத்த ஒரு அரிய புதையல். நம்மில் எத்தனை பேர் அதை உணர்கிறோம். திருக்குறளில் இல்லாதது வேறு எந்த ஒரு நூலிலும் கிடையாது. அத்தகைய திருக்குறளில் இருந்து இதோ “ நட்பு” அதிகாரம் செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. | 781 |
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. | 782 |
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. | 783 |
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. | 784 |
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். | 785 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. | 786 |
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. | 787 |
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. | 788 |
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. | 789 |
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. | 790 |
அனைத்து குறளிற்கான பொருள் அடுத்த பதிவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக