TamilNatpu


2.11.2011

நேயர் விருப்பம் - சொல்லத்தான் நினைக்கிறேன்


படம்                             - காதல் சுகமானது
பாடியவர்                   - சித்ரா
வருடம்                       - 2003
இசை                            - எஸ்.ஏ.ராஜ்குமார்





சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசற்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது

அந்திவெயில் குலைத்து
செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்

வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்

இந்த ஜீவன்
இன்னும் கூட 
ஏன் உயிர் தாங்குது?

காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

லலலா லலலலா
லலலா லலலலா

சின்ன பூவொன்று
காயை தாங்குமா?

உன்னை சேராமல்
என் விழி தூங்குமா?

தனிமை உயிரை வதைக்கின்றது

கண்ணில் தீ வைத்து
 போனது நியாயமா?

என்னை சேமித்து வை
 நெஞ்சில் ஓரமா

கொலுசும் உன் பேர் ஜெபிக்கின்றது

தூண்டிலினை தேடும்
ஒரு மீன் போல நானே

துயரங்கள் கூட
அட சுவையாகுது

இந்த வாழ்க்கை
இன்னும் இன்னும்
ரொம்ப ருசிக்கின்றது.

காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா?
நீயும் ஆனந்த பைரவி ராகமா ?
இதயம் அலைமேல் சருகானதே

ஒரு சந்தன பெளர்ணமி ஓரத்தில்
வந்து மோதியே இருந்த மேகமே
தேகம் தேயும் நிலவானதே

காற்று மழை சேர்ந்து
வந்து அடித்தாலும் கூட
கற்சிலை போலே
நெஞ்சு அசையாதது

சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்
ஏன் குடை சாய்ந்தது?
காதல் சுகமானது

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

வாசற்படி ஓரமாய்
வந்து வந்து பார்க்கும்
தேடல் சுகமானது

அந்திவெயில் குலைத்து
செய்த மருதாணி போல
வெட்கங்கள் வர வைக்கிறாய்

வெளியே சிரித்து
நான் விளையாடினாலும்
தனியே அழ வைக்கிறாய்

இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது?

காதல் சுகமானது

லலலா லலலாலா லலலலலா
லலலா லலலாலா லலலலலா

2.07.2011

மிக பிடித்த பாடல் வரிகள்- நானாக நான் இல்லை தாயே

படம்                                : தூங்காதே தம்பி தூங்காதே
வருடம்                          : 1983
பாடியவர்                       : இளையராஜா
இசை                               : இளையராஜா
பாடல்                             : வாலி

ம் ஹூஹூம் ம் ஹூஹூம்
ம் ஹூஹூம் ம் ஹூஹூம்
ம்ஹூம் ஹூம் ம் ஹூம்ஹூம் ம்ஹூம்ஹூம்

நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன் சேயே

நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

கீழ்வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்


நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே


மணிமாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காண வேறில்லை

நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே

2.05.2011

நல்லா சொல்றீங்கப்பா டீடெய்லு

தமிழ்நாட்டின் மாண்புமிகு அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது
இன்றுதான் தெரிகிறது.

நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருந்ததால் திரு.பெரிய கருப்பன் அறநிலையத்துறை அமைச்சராம்.

அப்படியானால் கையில் திரு.பொன்முடி நிறைய புத்தகம் வைத்திருந்தாரோ
உயர்கல்விதுறை அமைச்சர் ஆவதற்கு?

பாவம் திரு.தங்கம் தென்னரசு, கொஞ்சமாக வைத்திருந்தார் போலும் அதனால்தான் கல்வித்துறை அமைச்சர் ஆகிவிட்டார்.

சட்டைப் பையில் நிறைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததால் திரு.அன்பழகன் நிதி அமைச்சர் போலும்.

ஆமாம் திரு.ஆற்காடு வீராசாமி எதை வைத்திருந்தார் மின்துறையை பெறுவதற்கு.

திரு.கோசி.மணி பாவம் நிறைய கூட்டுறவு கடன் வைத்திருந்தார் போல,அதனால் கூட்டுறவு துறையை கொடுத்தார்கள்.இப்பொழுது கடனை செலுத்தியதாலும் வயதாகிவிட்டதாலும் முன்னால் படைவீரர் நலன். ஆனால் புள்ளிவிவரத்துறை ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை தேமுதிக கூட்டணி அமைந்து திமுக வென்றுவிட்டால் அருமையான அமைச்சர் கிடைத்துவிடுவார் புள்ளிவிவரத்துறைக்கு. நமது கேப்டனை அடித்துக்கொள்ள ஆள் இருக்கிறதா என்ன புள்ளிவிவரம் தருவதற்கு.

திரு.மு.க.ஸ்டாலின் மிசாவில் ”உள்ளே” இருந்ததால் உள்துறை அமைச்சர்.

திரு.வீரபாண்டி ஆறுமுகம் விவசாயம் நிறைய செய்வதால் விவசாயத்துறை அமைச்சர்.

திரு.துரைமுருகன் பெண்சிங்கம் திரைப்பட அனுமதிசீட்டை கூவிக் கூவி விற்று பொதுப்பணி ஆற்றியதால் பொதுப்பணித்துறை. சட்டத் துறை எப்படியோ?

திரு.கே.என். நேரு லால்குடிக்கும் திருச்சிக்கும் அடிக்கடி பேருந்தில் வந்ததால் போக்குவரத்து துறை அமைச்சர்.

திரு செல்வராஜ் காட்டுக்குள் சுற்றி திரிந்ததால் வனத்துறை.

திரு.பன்னீர்செல்வம் நல்ல உடல் நலத்துடன் இருந்ததால் சுகாதாரத்துறை.

திரு.பொங்கலூரார் நிறைய சிறு தொழில் நிறுவனங்கள் நடத்துவதால்

அடபோங்கப்பா நல்லா சொல்றீங்க டீடெய்லு.