படம் - உயர்ந்த உள்ளம்
வருடம் - 1985
பாடியவர்கள் - கே.ஜே. யேசுதாஸ், எஸ்.ஜானகி
இசை - இளையராஜா
ஹாஆ ஹாஆ ஹாஆஆஆஆஆ ஆ
ஹாஆ ஹாஆ ஹாஆஆஆஆஆ ஆ
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
கையில் தீபம் இருந்தும்நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணைத் தந்தும் உன்னை நான்
அன்னை போல காப்பேன்
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா
விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
முத்தம் போடும் வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை
காமபாணம் பாய்வதால்
காயம் ஆகுமே
காமபாணம் பாய்வதால்
காயம் ஆகுமே
கலசம் இங்கு கவசம் ஆகும்
காமன் அம்பு முறிந்து போகும்
மலர்ந்த தேகம் சிவந்து போகும்
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக